Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்
இறப்பு - 21 APR 2019
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல் 2019 இலங்கை, Sri Lanka Sri Lanka
Tribute 210 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் இடம்பெற்ற  தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களின் ஓராண்டு நினைவாக எமது ஐ பி சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.  

ஆண்டு ஒன்று ஆனதுவே
ஆறாத வடுவாக
நீண்டு கொண்டு செல்கிறது
நினைவில் மூழ்கிறது
வேண்டிய ஆலயத்தில் விடியல் காலையில்
மாண்டவர் எத்தனையோ
மனமெல்லாம் நடுங்குகிறது 

மரித்த உயிர்கள் அனைத்தும்
மகத்துவம் நிறைந்தது
உயிர்த்த ஞாயிறு தினத்தில்
உறவுகளைக் கொலை செய்து
உயிர்த்த தேவனை மரிக்கச் செய்தனர்
உள்ளன்பற்ற உருப்படாத சிலர்..

வரித்த கொள்கை என 
மார்தட்டிக் கூறி
விரிந்த பூக்களை கசக்கி எறிந்து
விளைந்த பயன் என்ன
விடிவில்லாத் துயரம் ஒன்றே  

விழிகளில் நீருடன்
வேதனை மனமுடன்
அழுத மனிதர்கள் ஆயிரம் 

ஆயிரம் தளிர்களின் உயிர்களைத்
தரணியில் மாய்த்து
தாய் தந்தையை தவிக்க விட்டு
தேய் பிறையாய் மாற்றினர் 

இளமையில் பெற்றோரையும்
முதுமையில் பிள்ளைகளையும்
இழந்த உறவுகள் இன்றும் வருந்த
இழி செயல் செய்திட்ட மனங்கள்
மாற வேண்டும் 

இறந்த உயிர்கள் இறைவன் 
அருள் பெற்று
பேரின்பம் பெற அனைவரும்
இந் நாளில் பிரார்த்திப்போமாக. 

இறந்தவர்கள் நினைவில் மூழ்குவதுடன் இவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

தகவல்: RIPBOOK