
யாழ். ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(லண்டன்), ரதிகாந்தன்(நோர்வே), சசிகலா(புத்தூர்), செல்வகுமார்(லண்டன்), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புதிணா, செல்லக்கிளி, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகிணி, பவானி, சசிகரன், சயானி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சன் , தனுசன், சரண், நிவேதா, றிவிசா, நிதுசா, டினோத், ஜிந்துஜா, கிசாளன், திலானி, தியானி, திசானி, கிசான், திசான், தஸ்வின், அக்சரா, பவின்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.