Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1927
இறப்பு 22 JAN 2019
அமரர் வேலுப்பிள்ளை சண்முகநாதன் 1927 - 2019 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

யசோதரா(ஆசிரியை, யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி), காலஞ்சென்ற சசீந்திரன், பாமா(ஆசிரியை, யா/கல்வியங்காடு இ.த.க பாடசாலை), குமுதாஞ்சலி(நோர்வே), உதயவிக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரமலிங்கம்(ஓய்வுநிலை தபாலதிபர்- கனடா), பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகுமார், காலஞ்சென்ற கண்ணதாசன்(ஆசிரியர்), சிவகுமாரன், வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புனிதவதி(ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்றவர்களான குலசேகரம் பிள்ளை, சண்முகநாதன், கனகம்மா, கனகலிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரவு(விதானையார்), கமலாம்பிகை மற்றும் ஞானாம்பிகை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

வைஷ்ணவி(2018 Bio மாணவி, யா/வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை), சேயோன், துர்க்கா, விதுரன், லக்‌ஷயன், தர்சனா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்