

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நல்லதம்பி அம்பிகாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அருமைத் தந்தையே !
என்ன கஷ்டங்கள் வந்த போதிலும்
அனைத்தையும் கடந்து,
கஷ்டம் என்பதே அறியாத வாழ்க்கையை
எமக்கு அமைத்து தந்தீர்கள்.
உங்களுடன் நாம் பயணித்த காலங்கள் எல்லாம்
இன்றும் எம் மனதில் பசுமையாய் இனிக்கிறது.
“எல்லாம் நன்மைக்காக” என்ற
பொன்மொழியும் பொய்த்துப் போனது
உங்கள் மரணத்தில்.
நிமிடங்கள் மணத்துளிகளாக,
மணித்துளிகள் நாட்களாக,
நாட்கள் மாதங்களாக,
மாதங்கள் வருடங்களாக கடந்து போனாலும்
மனம் ஏற்க மறுத்து அடம்பிடிக்கிறது
சிறு பிள்ளை போல “அப்பா வேண்டும்” என்று.
நீங்கள் எம் வாழ்கைக்கு வழிகாட்டியவர் அல்ல,
“நீங்கள் தான் எங்கள் வாழ்கையே”
இன்றுடன் 5 ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
என்றும் உங்கள் நினைவுடன்