Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 10 MAY 1954
மறைவு 18 MAR 2023
அமரர் வேலாயுதபிள்ளை தேவராஜா 1954 - 2023 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, ஜேர்மனி Altena, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை தேவராஜா ​அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

என் அன்புக் கணவரே
எனைவிட்டு ஒருபொழுதும் இருக்கமாட்டீரே
எப்படித்தான் விட்டுப்பிரிய மனம் வந்ததோ!
ஒவ்வொரு நொடியும் உந்தன் நினைவுதான்!

எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்

31 நாள் ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்

31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா

என்றும் உங்கள் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்