வெஞ்சர் லோவர் லோரன்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரப்பன் ரெங்கசாமி அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரப்பன், நல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
அறிவழகன் (நாயுடு- ஆராதனா ஜுவலர்ஸ், NO.31,Beach Street,கொழும்பு-11), பாண்டியன்(நாயுடு- நிவ் சாந்தினி ஸ்டோர்ஸ், இல. 18, சென். அந்தனிஸ் மாவத்தை, கொழும்பு-13), தரணீஸ்வரன்(நாயுடு- ஆராதனா ஜூவலர்ஸ், No. 31, Beach Street, கொழும்பு- 11), செல்வி (நோர்வூட்), தேவி(நோர்வூட்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராமசந்திரன் நாயுடு, குணசேகரன் நாயுடு, நவமணி(கொழும்பு), கலைச்செல்வி(ஆசிரியை-வட்டவளை தமிழ் மகா வித்தியாலயம்), மதிமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், டிலுக்சன், ஷாலினி, டிலக்ஷா, கவின்ஷா, துஷாலினி, துமீஷா, கிஷாகர், டிம்ஷாலினி, அகல்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2019 சனிக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.