Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1966
இறப்பு 19 NOV 2019
அமரர் வரராசசிங்கம் அருணகிரிநாதன்
ஆச்சாரியார்
வயது 53
அமரர் வரராசசிங்கம் அருணகிரிநாதன் 1966 - 2019 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மாவிட்டபுரம் செந்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வரராசசிங்கம் அருணகிரிநாதன் அவர்கள் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வரராசசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

சறோஜினிதேவி(பாமா) அவர்களின் பாசமிகு கணவரும்,

டிலக்சன்(வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவர்), காலஞ்சென்ற லக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெளரிமலர், ஸ்ரீசெல்வநாதன்(ஜேர்மனி), மிருணாளினி, கிருபாகரன், காலஞ்சென்ற வசுதராணி, தயாபரன்(ஆசிரியர்- சின்னடம்பன் பாரதி வித்தியாலயம், ஐயப்பன் ஒப்பந்தகாரர்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற திசைநாதன், குணேஸ்வரி(ஜேர்மனி), பாலச்சந்திரன், பத்மாவதி, சண்முகநாதன், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், ஞானேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோகன்ராஜ், தர்மினி, வசுதா, சஜித், கிருஷாந், நிறோஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கல்ப்பனா, காஞ்சனா, பிரவீணா, சிந்துயன், பிரதீபன், அஜெயன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவிந்தன், ரதுஷா, ரதீஷன், துளசிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தக்சகன், சஸ்வின், பவிஸ்னா, சாருசன், கவிஸ்னா, தாட்சாயினி, டினோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்