யாழ். கரும்பிடை, சமரபாகு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் தங்காராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தினி, றஜனிகா, றஜிதா, அச்சுதன், அரவிந்தன், அனுசன், சொர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஷ்பநாதன், சுதாகர், நிரஞ்சன், கிரிசா, ஜெலிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொப்பணன், சந்திசா, நதுஷா, பாவணன், சுஜாத், மாகாபிரித்தி, சுஜாத்தான, விபூசன், பிரீத்தி, ஜெவினா, அஜின், விகான், அக்ஷிதா, அஷ்விக், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.