Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1949
இறப்பு 17 JUN 2020
அமரர் வல்லிபுரம் நவரத்தினம்
வயது 71
அமரர் வல்லிபுரம் நவரத்தினம் 1949 - 2020 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நவரத்தினம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துக்குமார் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வக்குமார், செல்வரஞ்சினி, செல்வரஞ்சன், செல்வஜேந்தினி, செல்வநந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஸ்யந்தி, ஜெயந்திரபாலா, காயத்திரி, பவானந்தன், புஸ்பவதனி, திவாகரன், கயந்தினி, பிரதிகரன், கௌசல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சறோஜினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

இராசம்மா, குமாரவேலு, செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, முத்துவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாலினி, சஞ்யை, சஞ்ஜித், வனோஜன், தர்ஷானி, கபிலினி, கோஷினி, சாம்பவி, சாரவி, சைந்தவி, பிரணவன், நிக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices