
யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
பத்து ஆண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
அன்னாரின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மயிலிட்டி முருகன் கோயிலில் அபிஷேகம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மதியபோசனம் இடம்பெறும். இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.