யாழ். சாவகச்சேரி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
என் அருமை நாயகனே!
என்னையும் என் பிள்ளைகளையும்
தவிக்க விட்டு வெகுதூரம் சென்றதேனோ!
நாட்கள் 34 ஆனாலும்
உங்கள் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் எங்களை விட்டு
வெகு தூரம் சென்றாலும்
உங்கள் அன்பு முகம் எங்கள்
நெஞ்சில் நீங்காமலிருக்கும்
உங்களோடு வாழ்ந்த
காலங்கள் மீண்டும் வராதா
என்று ஏங்கித் தவிக்கின்றோம்
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்கவிட்டு சென்று விட்டீரே!
என் அன்பு நாயகனே!
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள்
பாசமிகு அப்பாவே!
எங்களைவிட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதலித்துப் போனதுவோ! இன்று
பிரிவு என்னும் துயரால்
மாதமொன்று மறைந்தாலும் எம்
மனங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
RIP