

யாழ். காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும், கணவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோமலிங்கம் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கெங்கேஸ்வரி மற்றும் காண்டீவராசா, பார்த்திபராசா, தனஞ்செயன், பற்குணம், விஜயருபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி, மோகனா, வரலட்சுமி, கயானி, சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகேஷ்வரி, இந்திராணி, விஜயலட்சுமி, புனிதவதி,புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகா, மயூரதி, சுதர்ஷன், டிலக்ஷி, டிலானி, காவியவர்ஷினி, கிஷானி, விதுசி, சோபி, விதுரா, அருண், தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.