
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவபாதசுந்தரம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதினி, காலஞ்சென்ற சர்மியன், ஜயமிலன்(பிரான்ஸ்), வினோதினி(உருத்திரபுரம்), தாரணி(திருவையாறு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனிதா(திருவையாறு), திருமுரளி(சுவிஸ்), ரவீந்திரன்(திருவையாறு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மங்களேஸ்வரி, காலஞ்சென்ற மதிவதனி, மதியழகி, மதிறஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகல்யா, ஆரரன், டெனிசா, கஸ்மியா, பானுசன், யன்சன், நிரூபா, போஜிதா, நிரூபன், மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort