

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ரொறிங்டன் நாரஹென்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பஞ்சாட்சரம் அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வபூசணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதாகரன்(லண்டன்), சுபாசினி(லண்டன்), கோபிகா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினராஜன், காந்தமலர்(விஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமசிவம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகம், ஞானலெட்சுமி, காலஞ்சென்ற கோபாலசுந்தரம், இன்பசுந்தரம், யோகேஸ்வரி, பரராஜசுந்தரம், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ருக்குமணிதேவி, குலேந்திராதேவி, குமராசாமி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் மகாலெட்சுமி தம்பதிகள், சந்திரகிரி சோமேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,
நிகிலேஷ், சஞ்சிதா, கிரிஜன், யதுசன், பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 07-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் பி.ப 09:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம்