
அமரர் வைரமுத்து வரதகுமார்
வயது 69
நான் வரதகுமாருடன் படித்தேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியான நண்பராக இருந்தார். அவர் கல்வி கற்கும் காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு முறை அவரை கொழும்பில் சந்தித்தேன். லண்டனில் அவர் வாழ்ந்தபோது பல முறை தமிழின பிரச்சினைகள் பற்றி நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னை தொடர்பு கொண்டு அவரது சமூக வேலை பற்றி என்னிடம் பேசினார். இப்படி இருக்க திடீரென்று வரதகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நல்ல நண்பரை இழந்துவிட்டேன். சிறந்த சமூக சேவகரை தமிழ் சமூகம் இழந்துவிட்டது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
TAMIL CENTRE FOR HUMAN RIGHTS - TCHR/CTDH CENTRE TAMOUL POUR LES DROITS DE L'HOMME (Established in 1990) (UN accredited NGO to the World Summit on Information Society and the Warsaw Conference) 21...