Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 JAN 1959
இறப்பு 03 JAN 2023
அமரர் வைகுந்தநாதன் தவரஞ்சிதம்
வயது 63
அமரர் வைகுந்தநாதன் தவரஞ்சிதம் 1959 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் கொண்ட வைகுந்தநாதன் தவரஞ்சிதம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை எதிர்வரும் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் "கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்” வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் எதிர்வரும் 02-02-2023 வியாழக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் “அன்னாரது இல்லத்திலும்” நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:

கழுவெட்டி ஒழுங்கை மாவிட்டபுரம்
கொல்லங்கலட்டி தெல்லிப்பளை

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்