யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வச்சிரவேலு வடிவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 06-09-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் கீரிமலை புனிததீர்த்தக் கரையிலும் 08-09-2025 திங்கட்கிழமை அன்று வீட்டிலும் கிரியைகள் நடைபெற்று, பின்னர் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் பரமேஸ்வரி மண்டபத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், மதிய போசன நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பமாக வருகைதந்து கலந்து கொள்ளும் வண்ணம் [அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.