
முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் இராஜமணி அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கென்றி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜினி(கனடா), அன்ரனிற் இராஜசிறீ(பிரித்தானியா), அன்ருராஜன்(கனடா), றாஜயீ(நோர்வே), சூட்டி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருசெல்வம், குணமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசநாயம், லேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இலங்கைநாயகம், அமரசிங்கம்(இலங்கை), செல்வமணி(இலங்கை), தேச இலங்கை மன்னன்(பிரித்தானியா), மேரியசிந்தா(பிரித்தானியா), விக்கிரமசிங்கம்(பிரித்தனியா), விக்ரோறியா(பிரித்தானியா), இலங்கைநாயகி(பிரித்தானியா), நளாயினி(பிரித்தானியா), லூர்துமணி(பிரித்தானியா), கிறிஸ்தோபர்(பிரித்தானியா), இரட்ணசிங்கம்(பிரித்தானியா), சற்குணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காந்தராஜா(இலங்கை), லெஸ்லீ(பிரித்தானியா), மல்லிகா(கனடா), மொனிக்கா(நோர்வே), ஞானசெளந்தரி(ஞானம்- ஐக்கிய அமெரிக்கா), Dr. ஆனந்தசெளந்தரி(ஆனந்தி- பிரித்தானியா), காலஞ்சென்ற பாலசெளந்தரி(பாலு-இலங்கை), திலகா(பிரான்ஸ்), சுமனா(கனடா), ரம்மியா(கனடா), மிலானி(கனடா), மொறின்(நோர்வே), அரவிந்தன்(நோர்வே), கனேஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. நிர்மல காந்தன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. கமலநாதன்(பிரித்தானியா), Dr. நவரத்தினம்(இலங்கை), சத்தியநாயகம்(பெரியபாபு- பிரான்ஸ்), தனநாயகம்(சின்னபாபு- கனடா), குனநாயகம்(குஞ்சு- கனடா), ஞானநாயகம்(சித்திரா- கனடா), அமலநாயகம்(அமளி- நோர்வே), புஸ்பராணி(புசி- நோர்வே), புனிதா(கச்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
கார்த்திகா(கனடா), காயத்திரி(கனடா), சகானா(கனடா), ஜெனிவர்(பிரித்தானியா), அஸ்வினி(பிரித்தானியா), விஷ்னுவாசன்(பிரித்தானியா), ஜெரிமியா(கனடா), ஜெஸ்மின்(கனடா), மைக்கல்(நோர்வே), அலிசியா(நோர்வே), அமிலி(நோர்வே) ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-09-2020 வியாழக்கிழமை அன்று இல. 322/2 அளுத்மாவத்தை வீதி, மட்டக்குளி, கொழும்பு- 15 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 03:30 மணிமுதல் 04:00 மணிவரை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மட்டக்குளியில் உள்ள சென் அன்றோஸ் தேவாலயத்தில் ஆசீர்வாதச் சடங்கு நடைபெற்று பின்னர் மாதம்பிட்டியா மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்