Clicky

கண்ணீர் அஞ்சலி
தோற்றம் 09 JAN 1964
மறைவு 08 SEP 2024
அமரர் துரைராசா வாசுதேவன்
வாசன் பிரிண்டர்ஸ் உரிமையாளர்- இலண்டன்
வயது 60
அமரர் துரைராசா வாசுதேவன் 1964 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி நெல்லியடி புதுவளவு N.C.C றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா வாசுதேவன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அன்பு நண்பனே!!
ஆருயிர்த் தோழனே!!

இன்பமோ துன்பமோ
எம்முடன் இணைந்திருந்தாய்
 இருக்கும் இடமெல்லாம்
உன் காந்தக்குரல் கொண்டு
 களிப்புடனே பேசி..
கலகலப்பாய் ஆக்கிடுவாய்
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் நீ

நேசத்திற்குரியவனே!!
நெஞ்சம் வெதும்புதடா
காலக்கொடியவன் கண்வைத்து உன் உயிரை
 வேளை வருமுன்பே விரைந்து ஏன் பறித்தான்?

பழக இனியவனே!
பாசத்திற்குரியவனே!
ஆண்டுகள் பல தொடர்ந்த எம் நட்பு
 மீண்டும் வாராதோ என ஏங்கும் தனிமை
ஆறுதல் சொல்ல ஆளில்லா வெறுமை
மாறாத உந்தன் மாசற்ற அன்பை
 பேறாக பெற்ற நாம், பெருமை கொள்கிறோம்.....

  

தகவல்: நண்பர்கள்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

Notices