
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ்பிள்ளை ஜெரோம் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி தோமஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கிறகரி சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி றீற்றா அவர்களின் அன்பு கணவரும்,
அன்ரன், ஜேம்ஸ், யூஜினா, மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராணி, மணி, துரைசிங்கம், வின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டோன், ஷாமா, மொகான், ஐரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனவ், மொகான், ஜேட், ராயென், சொகான், ஷைலோ, ஷேவோன், ஜொயானா, லக்ஷா, கெவின் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
ஜேக்சன், கெய்லி, ஷாலோட்த் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-11-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I know you must be feeling a lot of pain right now, but I want you to know that God is always with you and you are also in our prayers. Receive my deepest condolences