யாழ். வருணன் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சிவகாமியம்மா அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு துனணவியும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, சிவஞானரத்தினம், சிவசுப்பிரமணியம், சிவதாசன், வைகுந்தன் மற்றும் சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கோசலையம்மா, சபாநாயகம், பரமேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமரகுருபரன்(பிரித்தானியா), ராகினி, நந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதா(பிரித்தானியா), ஜெசி(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,
ஷஜிந்தன், ஜெஷிந்தன், அக்ஷயா, மயூரி சோவியா, சயூரி இசாபெலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2026 புதன்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வருணன் தீத்தாங்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
வருணன்,
அச்சுவேலி.