யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற் இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், பளை மாசாரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா பிரேமகாந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா(ஓய்வுநிலை அதிபர் - யாழ்/புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) தங்கம்மா(ஓய்வுநிலை அதிபர் - கிளி/இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷஜனி(ஆசிரியர்-மாசார் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கவிநயன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கலையரசி(ஓய்வுநிலை பிரதி அதிபர்-கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான பத்மகாந்தன்(சுவிஸ்), கலைச்செல்வி(கனடா), கலைவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்-கிளிநொச்சி வலயம்), ஜெயகெளரி(லதா-சுவிஸ்), லோகநாதன்(கனடா), தர்மராசா(பொறியியலாளர்-கனடா), வினோத், ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பளை மாசாரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.