யாழ். உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராஜேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தில் மூத்தவளாய் தருமருக்கு பிறந்தவளே,
தாய் இல்லா உன் சகோதரருக்கு தாயாய் இருந்து காத்தவளே,
உன் சகோதரங்களை திக்குத்திசையில் தவிக்கவிட்டு எங்கோடிச் சென்றாயம்மா?
நீ பெத்தெடுத்த பிள்ளை ஒன்றம்மா நீ வளர்த்தெடுத்த பிள்ளைகளோ பலவம்மா...
எள்ளையும் ஏழாய் பங்கிடு என்னும் சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவளே,
உன் சாவை மட்டும் தனியே எடுத்துக்கொண்டாயே.
உன் கடமை செய்வதற்க்கு உன் உறவுகளெல்லாம் எட்டுத் திக்கும் தவிக்குதம்மா.
முற்றத்தில் எம்மை இருத்தி உணவூட்டி எம்மை வளர்த்தாய்
உனக்கு வாய்க்கரிசி போடக்கூட முடியாமல் போனதேனோ?
பாசமாய் எமையழைத்து பால்சோறு ஊட்டினாயே
உன்னை பார்க்கக்கூட முடியாமல் தவிக்கின்றோம் நாம் இங்கு.
நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தாளும் எங்கள் இதயக்கோயிலிலே நிரந்தரமாய் குடியிருப்பீர்கள்...
உங்களின் பிரிவாள் வாடி நிற்க்கும் நீ வளர்த்த மலர்ச்செடிகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 15-08-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும் .