Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 JUN 1944
மறைவு 19 OCT 2024
திரு தியாகராஜா புஸ்பநாதன்
முன்னாள் வர்த்தகர்
வயது 80
திரு தியாகராஜா புஸ்பநாதன் 1944 - 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ், சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா புஸ்பநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பத்மாவதி(ஓய்வு பெற்ற ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜானகி, ஜனனி, ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மசிறி, வாகீசன், யாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுவன், மகிஷா, விகாஷ், வைஸ்ணி, வருணீஸ், சாயீஷ், சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரமநாதன், கயிலநாதன், காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பத்மினிதேவி, சோமசுந்தரம் மற்றும் செல்வராணி, காலஞ்சென்றவர்களான தேவராஜா, மங்கையர்க்கரசி மற்றும் சண்முகராஜா, கனகராஜா, பஞ்சாட்சரதேவி, ஆனந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், மகேஸ்வரி மற்றும் பழனிநாதன், சந்திரமணி, காலஞ்சென்ற பாலேந்திரன் மற்றும் ஸ்ரீ நந்தினி ஆகியோரின் சம்பந்தியும்,

அகிலன், பகீரதி, கலைச்செல்வி, ஐங்கரன், அபிராமி, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தாப்பாவும்,

சியாமினி, துஸ்யந்தினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து யாழ். வண்ணார்பண்ணை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

வீட்டு முகவரி:
39/4, வைரவர் ஒழுங்கை,
சிவப்பிரகாசம் வீதி,
யாழ்ப்பாணம். 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்

Photos

No Photos

Notices