
யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும், இல. 03, மதுரைவீரன் வீதி, மகாறம்பைக்குளத்தைப் வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராஜா லீலாவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 21-08-2025
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 21-08-2025 வியாழக்கிழமை அன்று மதுரைவீரன் வீதி, மகாறம்பைக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.