

-
27 JAN 1945 - 17 DEC 2019 (74 வயது)
-
பிறந்த இடம் : சுதுமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தசாமி கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருவருட்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், சிவஞானம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருவருட்செல்வம்(செல்வசக்தி அரிசி ஆலை உரிமையாளர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
நந்தகுமாரன்(நந்தா ரயர் ஹவுஸ் உரிமையாளர்- வவுனியா), செல்வகுமாரி(சுதுமலை), செல்வகுமாரன்(ஜேர்மனி), தவக்குமாரன்(இங்கிலாந்து), புஷ்பகுமாரி(கொழும்பு), கிசோக்குமார்(கிசோ ரயர் ஹவுஸ்- சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயரஞ்சினி(வவுனியா), ஸ்ரீகணேசன்(சிரேஷ்ட ஆங்கிலத்துறை விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), அருளினி(ஜேர்மனி), ரஞ்சனி(இங்கிலாந்து), ஆரூரன்(மனோன், சினி கெம்பைன்ஸ் உரிமையார்- கொழும்பு), சுதாசினி(ஆசிரியை-யாழ் மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், தர்சாயின், கிஷானி, சஸ்மீரா, நதீஸ்கர், கிசோபனா, பிரதீஸ், அபிஷனா, டர்சனா, லதுசன், தீபிகா, அபிசகா, தருண், அஸ்வினி, யுவன், யதார்த், குர்ஜித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுதுமலை, Sri Lanka பிறந்த இடம்
-
வவுனியா, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்