திதி:31/07/2026
யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், தற்போது சுவிஸ் Basel Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கண்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள்
நிற்பதுபோல் நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும்
அலைமோதிய வண்ணம் உள்ளது அம்மா!!!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences from Mahalingam Family Canada
Our deepest condolences by Nagaratnam family from Canada