10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம்
இளைப்பாறிய கிராமசேவகர் - நயினாதீவு, புங்குடுதீவு
வயது 80

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம்
1934 -
2014
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும்
கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
"காலங்கள் கடந்து போகும்
ஆனால்
கண்மணியே அப்பா
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில்
நிற்கும் - எம்
கண்ணிறைந்த
கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் பத்து ஆண்டுகள்
ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute