10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பூநகரி மட்டுவில் நாடுமேற்கு நெற்புலவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் கதிரவேலு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாம் ஆண்டின் நீங்காத நினைவலைகள்.
---------------------------------------
கதிரவேலு ஆன எங்கள் ஐயாவே!
கதிரவனும் ஒளி இழந்து போனதிங்கு பொய்யாவே?
காலம் கடந்து பத்தாண் ஆனதையா!
காலன் உந்தனை அழைத்து போனதுதான் மெய்யாவே.
பூநகரிப் பூவரசும் பூவிழந்தது;
பூரிப்பிலே வாழ்ந்த குடும்பம் உனையிழந்தது.
பூமாலை வாடிஇங்கு பாமாலை பாடுதையா!
பூமிப்பந்தின் பாரிசில் நீ மறைந்துபோனதுதான் ஏனையா?
மட்டுவில் நாட்டு மேற்கினிலே,
மரணச் செய்தி கேட்டதையா ஊரினிலே!
மாமா உந்தன் குரல்கேட்குதே வீட்டினிலே!
மனைவி பிள்ளைகள் துயருற்று வாடுதே
புலம்பெயர் தேசத்தினிலே.
தகவல்:
சுதன் குடும்பம்- பிரான்ஸ்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute