Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தெட்சணாமூர்த்தி நாகமுத்து
மறைவு - 16 MAR 2018
அமரர் தெட்சணாமூர்த்தி நாகமுத்து 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமே
 பாசத்தின் உறைவிடமே
எங்கள் அப்பா ஆசையாய் இருக்குதப்பா
 சிரித்த உங்கள் முகம் பார்க்க
வந்திட மாட்டீர்களா?
 உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய் நினைத்தே
நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
 உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
 நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால்
 வாடுகிறோம் அப்பா!

உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
 தவிக்கின்றோம் மீண்டும் பிறந்து வருவீரா
 எம் அன்பு அப்பாவே!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute