5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தவமணி செல்வரத்தினம்
வயது 74

அமரர் தவமணி செல்வரத்தினம்
1940 -
2014
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி செல்வரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனது
அம்மாவை நாம் இழந்து
ஆறாது நெஞ்சு
அம்மா என்பது அருமருந்து
பொன்னோடு பொருள் சேர்த்து
பெரு வாழ்வு வாழ்ந்தாலும்
அம்மாவின் நிழலின் கீழ்
வாழ்கின்ற வரம் வருமோ!!!
இப்பிள்ளை அப்பிள்ளை
என்று பேதம் பார்ப்பதில்லை
எப்போதும் பிள்ளைகளுக்காய்
உயிர் வாழ்ந்த உயர் முல்லை
மண்ணோடு நாம் மறையும்
காலங்கள் வரும் வரைக்கும்
அம்மாவின் நினைவோடு
எம் ஆத்மா நிறைந்திருக்கும்...
தகவல்:
பிள்ளைகள்