5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி கணேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
அகலாது எங்கள் அன்பு உம்மை விட்டு
அம்மா என்று அழைக்கையில்
ஆறாத்துயர் அடைகிறோம் அம்மா
பவளமக்கா என்று பார்த்தவர்கள் கதைக்கையில்
பால் போன்ற உங்கள் முகத்தை
பார்க்கத் துடிக்கிறது எங்கள் மனம்
பதை பதைத்துப் போகிறோம் அம்மா
காணும் காட்சிகளில் கண்முன்னே வந்து
கலங்க வைக்கிறீர்கள் அம்மா
கனகாலம் எங்களுடன் வாழ்வீர்கள்
என்பதை
காலனவன் கனவாக மாற்றி விட்டானே அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Very sad to hear your mum passed away. May soil rest in peace.