யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மவதி நவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
திங்கள் ஒன்று போனதம்மா!
உன் வதனம் காணாது யுகம்
ஒன்று போனதுபோல்
ஆனதம்மா!
கருணை உள்ளம்
கொண்டதனால்
காலனவன் கவர்ந்தானோ!
அன்பு நிறை அம்மாவே
அழமாட்டோம் இனி நாங்கள் ஏனென்றால்
ஆண்டவனின் திருவடியை அடைந்திருப்பாய் நிச்சயமாய்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஈமக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களிற்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-11-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.