கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் முருகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஐயா இல்லம் எங்கும் இருந்து
உள்ளமெல்லாம் நிறைந்து
கள்ளங்கபடமற்று
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் ஜோதியாய்
நேசத்தின் ஒளியாய் இருந்த நீங்கள் ஐயா
மறைந்த செய்தி கேட்டு
துன்பமுற்றிறந்த வேளையில் ஆறுதல் கூறி அரவணைத்து,
துன்பத்தில் பங்கெடுத்து அனுதாபச் செய்தி தெரிவித்து,
உதவி புரிந்த உள்ளங்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றிகள்.