Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 JAN 1932
இறப்பு 12 MAR 2020
அமரர் தங்கரத்தினம் தம்பிராசா 1932 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, ஐக்கிய அமெரிக்கா Las Vegas ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் தம்பிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,  நன்றி நவிலலும்.

கண்ணிமைக்கும் பொழுதினிலே- சிவன்னடி
தேடி காற்றாய் சென்றதென்ன
நாட்கள் பல ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...

அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
மாதம் பல கடந்தாலும் நீ பெற்ற முத்துகள்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!

ஆண்டுகள் பல ஆனாலும்,
துவண்டு நிற்ப்போம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

அன்னார் சிவன்னடி அடைந்த செய்திக்கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 11-04-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.