

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தங்கக்கிளி சுப்பிரமணியம் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை சுப்பிரமணியம்(உரிமையாளர்- New Fashion Shop, நீர்கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
றஞ்சனிதேவி, பாஸ்கரன், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரன், மதியழகி. சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, இரத்தினவேல், நாகபூரணி(கிளி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், சிவலிங்கம் மற்றும் சிவபாலன், மகேஸ்வரன், மகாலிங்கம், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா, அனுஜன், யாழினி, லதுஷன். ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நீர்கொழும்பு இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Engal periammavin ilappukku varuththam theriviththa ellorkum nanri. Avarin aathma santhiadaya pirarthipom