10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாக்கியம் சூரியகுமாரன்
மலர், குட்டியக்கா, ஓய்வுநிலை எழுதுநர்- பிரதேச செயலகம், தென்மராட்சி
இறப்பு
- 18 DEC 2015
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவம், வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாக்கியம் சூரியகுமாரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்து ஆண்டு ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா !
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும் அம்மா !
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
பத்து ஆண்டு என்ன
பத்தாயிரம் வருடங்கள்
ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்