3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தமிழினி பிரபாகரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் உடுவில்
வயது 44
Tribute
38
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் K.K.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தமிழினி பிரபாகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே...
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்