உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு நடேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுகம் பேசும் சுதுமலை மண்ணில் தயை நிறை தம்புவின் தனயனாய்ப் பிறந்து வளர்ந்து, தகையாள் சிரோன்மணி கரம்பற்றி, இல்லறம் தன்னை இனிதாய் நடத்தி, பெருமைகொள் பிள்ளைகள் சண்முகதாசன், ஜெயகெளரி, கமலரஞ்சினி தனேசா, அரியதாசன், ஐவரைப் பெற்று கண்போல் பேணி வளர்த்த கனிவான எங்கள் அப்பாவே...!!!
சாந்தம் உங்கள் சொந்தமானது, பொறுமை உங்கள் உடன்பிறந்தது, அமைதி கொண்டு எம்மை ஆண்டு, அன்புச் சரித்திரம் எமுதினீர்கள் எண்பத்தைந்து ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து எம்மைப் பிரிந்து இன்றுடன் ஆண்டுகள் பத்து ஆனாலும் என்ன இந்த ஜென்மம் முழுவதும் எங்கள் நெஞ்சில் நிறைந்து இருப்பீர்கள்...
இறைபாதத்தில் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும்- மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்