

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தர்மசீலன் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், கச்சேரியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசிகன், சஸ்மிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணசீலனின்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தரஜனி(இலங்கை), நிர்மலா(கலா- கொலண்ட்), திரிகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை), ரேணுமதி(இலங்கை), சுகந்தி(இலங்கை), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமார், உதயசேகரகன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மாதுளன் அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,
ஆரோகணன், அருணோதயன், அகிலேசன், அஸ்னிகா, அபிநயன், அவந்திகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சௌமிகா, ஆரூரன், ஜேய்சுரன், எனொக், எலியட் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
And may his soul Rest In Peace