யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பையா வேலும்மயிலும் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்காமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்சினி, ஜெயக்குமார், ஜெயதர்சினி, குகதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரத்தினம், காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கவேலு, கமலாதேவி மற்றும் ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன், யுகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பாடு, கரணவாய் மத்தி, கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details