மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பர் பக்தசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் ஓடி ஓராண்டு முடிந்தும் ஆறவில்லை எம் துயரம்
கண்முன்னே நிழலாடுது உங்கள் கனிவான முகம் ஐயா!
கலைநயம் மிக்க கட்டிடக்கலை மேதையாய்
நீங்கள் வாழ்ந்த வாழ்வு காலம் கடந்தும்
எம் தலைமுறைக்குச் சொல்லும் உங்கள் பெருமை!
மலேசிய மண் ஈன்றெடுத்த மாண்புமிகு மாமனிதரே
மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த உத்தமரே!
அன்பால் எம்மை ஆட்கொண்ட உங்கள்
அரவணைப்பை இனி எங்கே காண்போம்?
எம் இதயம் தேடுதே உங்கள் நிழலை!
பாசத்தின் திருவுருவாய், பண்பின் சிகரமாய் நீங்கள் இருந்தீர்கள்
பார் போற்றும் வழிகாட்டியாய் எமக்கு வாழ்ந்து காட்டினீர்கள்!
உங்கள் இன்சொல்லும் புன்னகையும் எம் இல்லத்தின் செல்வம்
நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் எம் நெஞ்சில் தங்கும்!
இறைவன் அடி சேர்ந்தாலும் எம்மை என்றும் நீங்கள் காப்பீர்கள்
இமை பொழுதும் பிரியாமல் எம் நினைவுகளில் வாழ்வீர்கள்!
உமது ஆன்மா நித்திய அமைதி பெற இறைவனை வேண்டுகிறோம்
உயர்ந்த உங்கள் பாதங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Please accept our heartfelt condolences, Subramaniam Devarajan from UK
Aunty, Raji Akka & Ramesh . My deepest sympathies to all of you . My childhood memories with uncle will be with me forever. May he RIP 🙏