
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராஜவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தம்பிப்பிள்ளை அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,
கேதீஸ்வரன்(சுவிஸ்), சுபீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நல்லத்தம்பி, காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி(சுவிஸ்), கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுஷன்(சுவிஸ்), சாளினி(சுவிஸ்), திலக்ஷன், கிருசியா, நிக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.