Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1956
இறப்பு 29 AUG 2019
அமரர் தம்பையா புஸ்பராஜா 1956 - 2019 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கு  கட்டைவேலி அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு பத்தானை, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா புஸ்பராஜா அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

துமிலன், ஜனகன், கீரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிருஸ்ணபிள்ளை(கனடா), காலஞ்சென்ற கணேசராசன், சோமாஸ்கந்தராசா(பிரான்ஸ்), சிவயோகராசா(லண்டன்), பூபாலசந்திரன்(லண்டன்), தேவராணி(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப  09:00 மணிவரை மகிந்த மண்டபம், இல. 591 காலி வீதி, கல்கிசை, இலங்கை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும், 02-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப  08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்