Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1954
இறப்பு 23 MAR 2019
அமரர் தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா
ஓய்வுபெற்ற சிரேஷ்ட எழுதுவினைஞர், கட்டடங்கள் திணைக்களம்
வயது 64
அமரர் தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா 1954 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செண்பகவரதசேனாதிராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

விபூசணி(சுவிஸ்), சத்தியன்(Senior Software Engineer- Aeturnum Lanka Pvt Ltd), சயந்தன்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரிமளகாந்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுதர்சன்(சுவிஸ்), ஷயா(பல்கலைக்கழக மாணவி- UWA), தட்சாயினி(ஆசிரியை- வவுனியா தரணிக்குளம் கணேஸ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

துருபதி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜசேகரம், ஞானப்பூங்கோதை, பாலியருணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸத்விகா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுதர்சன்(மருமகன்), விபூஷனி(மகள்)