

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி செண்பகவரதசேனாதிராசா அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செண்பகவரதசேனாதிராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
விபூசணி(சுவிஸ்), சத்தியன்(Senior Software Engineer- Aeturnum Lanka Pvt Ltd), சயந்தன்(கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரிமளகாந்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுதர்சன்(சுவிஸ்), ஷயா(பல்கலைக்கழக மாணவி- UWA), தட்சாயினி(ஆசிரியை- வவுனியா தரணிக்குளம் கணேஸ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
துருபதி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜசேகரம், ஞானப்பூங்கோதை, பாலியருணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸத்விகா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
With our deepest and heartfelt condolences.