Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1930
இறப்பு 24 OCT 2020
அமரர் தம்பிப்பிள்ளை கணேசபிள்ளை
வயது 90
அமரர் தம்பிப்பிள்ளை கணேசபிள்ளை 1930 - 2020 கட்டைப்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கணேசபிள்ளை அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவகி(கனடா), பகீரதி(கனடா), யமுனா(எழுது வினைஞர்- இ.போ.ச தலைமைக் காரியாலயம் கோண்டாவில்), முகுந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரந்தாமன்(கனடா), மதியழகன்(கனடா), காண்டீபன்(கணக்காளர்- தொழிற்துறைத் திணைக்களம் வடமாகாணம்), யசோதரா(நிறைவேற்று அதிகாரி- இலங்கை வங்கி, ஸ்ரான்லி வீதிக்கிளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, நடேசபிள்ளை மற்றும் சரஸ்வதிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்ஸ்மன், லக்ஸ்னி, பகீரதன், பவித்திரா, சண்முகப்பிரியன், பிரணவன், வைஸ்ணவி, பவிசான், குருசன், யனோசான், சிவாஸ்கர், ஆதித்தியன், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Nov, 2020