Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 26 DEC 1932
மறைவு 29 NOV 2025
திரு சுவாமிநாதர் முருகேசு
இளைப்பாறிய விளையாட்டு அதிகாரி, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ஆவார்
வயது 92
திரு சுவாமிநாதர் முருகேசு 1932 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா மற்றும் இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் முருகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நிழலாய் நீங்கினாலும்,
நினைவாய் நீங்கள் நிலைக்கிறீர்கள்…

அமைதியான குணம் ததும்பி,
அறிவின் ஒளி வழிகாட்ட,
வாழ்க்கைப் பயணத்தில் பலருக்கும்
அனுபவத் தீபம் ஏற்றினீர்.

குடும்பத் தலைவனாய் நின்று
அன்பால் அனைவரையும் இணைத்தீர்;
மனிதாபிமானம் மிளிர்ந்த
மென்மையான இதயம் கொண்டீர்.
சமூகச் சேவையில் முன்நின்று
பல உயிர்களுக்குச் செங்கோலாய்த் திகழ்ந்தீர்;
உங்கள் பாதம் பதித்த மண் கூட
உங்கள் நினைவால் நெகிழ்கிறது.

இன்று முப்பத்து ஒன்று நாட்கள்
இதயம் இன்னும் ஏங்குகிறது…
ஆனால் நீங்கள் விதைத்த அன்பே
எங்களின் வாழ்வை தாங்குகிறது.
உங்கள் ஆசீர்வாதம் எந்நாளும்
எங்களை காப்பாற்றும் என நம்புகிறோம்;
உங்கள் பயணம் அமைதியானதாக,
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்…

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், மேலும் அன்னாரின் இறுதிக்கிரிகையை சென்னையில் சிறந்த முறையில் நடாத்த கரம் கொடுத்த ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்திற்கும் மற்றும் Raju குடும்பம், சுறேஸ் ஆகியோருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.