உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நீர்வேலி பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுசிலாதேவி வைத்தியநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10/08/2022
அம்மா உங்கள் குரல் கேட்காது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக்கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த
சுவைகள் எங்கே முத்தமிட்ட
உங்கள் மூச்சு எங்கே முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே அம்மா நாம் கண் திறந்த போது உங்கள் திருமுகத்தை
கண்டு சிரித்தோம்
அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த
போது எங்கள் வாழ்க்கையும்
இருண்டு விட்டதம்மா அம்மா
அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை இன்றோடு
ஐந்தாண்டுகள் கழிந்தாலும் உங்கள்
நினைவுகளுடன் மறக்க முடியாமல்
மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்.