
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Vaihingen an der Enz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ஆனந்தராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யாழ். கந்தர்மடம் அம்மன் வீதியைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். வேலணை ஆலம்புலத்தைச் சேர்ந்த தம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாராணிதேவி(மகா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அகல்யா, அபின்யா, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகராஜா(Ex M.M.C & J.P), காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், இராஜேஸ்வரி, பாக்கியராஜா, தேவராஜா, ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குகநாதன், ஜெயராணிதேவி, இந்திராணிதேவி(கருணா), றஜனி, காலஞ்சென்றவர்களான அழகம்மா, தியாகராஜா மற்றும் துதிமதிதேவி, இராசம்மா, சர்வேஸ்வரி, சந்திராம்பாள் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தங்கவேற்பிள்ளை, கந்தசாமி, செல்வேந்திரன், மனோராகினி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.