

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகம் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோரஞ்சனி, காலஞ்சென்ற ஜெயகுமார், சுலோஜனா, யோகரஞ்சிதம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயநாதன், தெய்வலக்சுமி, சுரேந்திரநாதன், மதிக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரங்கன், சயானி, ரிசாங்கன், சுமி, றொசான், கெவின், விருஷ்ணி, சசாங்கன், மகிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் 36/2 பிரம்படி வீதி கொக்குவில் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாயவனூர்(மம்மில்) இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771151262
- Mobile : +14167705192
- Mobile : +447860122826